மத்தூர் அருகே மணல் கடத்தி சென்ற டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆண்டவர் தலைமையிலான போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, கண்ணுக்கானூர் -சாலூர் சாலையில் கரும்பன் கூடம் அருகே வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார், ஓட்டுநர் ஜெய்சிங்கை கைது செய்தனர்.