ஜூன் 30-இல் மத்திகிரி சிவ பத்ர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஒசூர் அருகே உள்ள மத்திகிரி ராயல் டவுன் பகுதியில் உள்ள சிவ பத்ர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

ஒசூர் அருகே உள்ள மத்திகிரி ராயல் டவுன் பகுதியில் உள்ள சிவ பத்ர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
சிவபத்ர  காளியம்மன் கோயில்  கும்பாபிஷேகத்தை  முன்னிட்டு கடந்த  திங்கள்கிழமை (ஜூன்26)  மஹா கணபதி  வழிபாடு,   மஹா லட்சுமி ஹோமம்,  வாஸ்து  சாந்தி பூஜை  ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை முதல் கால யாக பூஜை  நடைபெற்றது.  புதன்கிழமை 2  மற்றும் 3 ஆம் கால யாக பூஜை,  வியாழக்கிழமை 4 மற்றும் 5 ஆம் கால யாக பூஜை,  வெள்ளிக்கிழமை  9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் முன்னாள் பிரதமர் தேவெகௌடா,  முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா,  தொண்டை மண்டல  ஆதீனம்  ஞானபிரகாச பரமாச்சாரியார்,  முன்னாள் எம்எல்ஏ  கே.ஏ.மனோகரன் உள்ளிட்ட பலர்  கலந்து கொள்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com