தேன்கனிக்கோட்டை அருகே மூதாட்டியை அடித்துக் கொலை செய்ததாக அவரது கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் எஸ்.குருபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பா (90). இவரது மனைவி நஞ்சம்மா (80). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் தம்பதி இடையே திங்கள்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த முனியப்பா கட்டையால் நஞ்சம்மாவை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து நஞ்சம்மாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து முனியப்பாவை தேடி வருகின்றனர்.