வாகனச் சோதனையில் இளைஞரை தாக்கிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஒசூரில் வாகனச் சோதனையின்போது  இளைஞரைத்  தாக்கிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து   மாவட்ட க்  காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

ஒசூரில் வாகனச் சோதனையின்போது  இளைஞரைத்  தாக்கிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து   மாவட்ட க்  காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
ஒசூரில்  12 சாலைகளில்  போலீஸார்  வாகனச்  சோதனை  நடத்தி வருகின்றனர்.    இந்த நிலையில் திங்கள்கிழமை  ஒசூரை அடுத்த அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த சிவா (24)  என்பவர் இருசக்கர வாகனத்தில் ஒசூர் }ராயக்கோட்டை சாலையில் சென்றார். அப்போது  அங்கு பணியில் இருந்த  காவலர் ஆறுமுகம்,  சிவாவின் இருசக்கர வாகனத்தை  நிறுத்தினார்.   மேலும்,  அவரை தடியால் அடித்து காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.   இதில் படுகாயம் அடைந்த சிவாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு  ஒசூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதைக் கண்டித்து  அதே பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து  நிகழ்விடத்துக்குச் சென்ற  நகரக் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாசுந்தரம் மற்றும் அட்கோ காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் 100 }க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.    இது குறித்து செய்தி தினமணியில் வெளியிடப்பட்டது
இதையடுத்து   உதவி  காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் விசாரணை நடத்த எஸ்.பி. மகேஷ்குமார் உத்தரவிட்டார். அவரது அறிக்கையைப் பெற்ற  எஸ்.பி மகேஷ்குமார், வாகனச் சோதனையில்  இளைஞர் சிவாவை தாக்கிய  ஒசூர் நகர காவலர் ஆறுமுகத்தை  ஆயுதப்படைப்  பிரிவுக்கு மாறுதல் செய்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com