ஊத்தங்கரையில் உலக நீர் தினத்தையொட்டி, சீமைக் கருவேல மரங்களை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் பொ.அருண் தலைமை வகித்துப் பேரணியைத் தொடக்கி வைத்தார். ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர் சுப்பிரமணியம், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் உள்பட அரசு அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் நீரின் அவசியம், கருவேல மரங்களை அகற்றுவது குறித்தும் மாணவர்கள் தங்கள் கைகளில் பதாதைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பிச் சென்றனர். பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.