ஒசூரில் ஆண்களுக்கான குடும்ப நலக் கருத்தடை சிகிச்சை முகாம் மார்ச் 25-இல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில், புதன்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:
பெண்களின் சுமையைக் குறைக்க ஆண்களும் முன்வர வேண்டும் என்ற நோக்கில் எளிய, பாதுகாப்பான என்எஸ்வி எனப்படும் ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி மார்ச் 25-ஆம் தேதி (சனிக்கிழமை) ஒசூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் இந்த முகாம் நடைபெறுகிறது.
முகாமில் கலந்துகொண்டு கருத்தடை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1,100 அரசால் அன்றே ரொக்கமாக வழங்கப்படும். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.