கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வு எதிர்ப்புக் கருத்தரங்கம் சனிக்கிழமை ஒசூரில் நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்குக்கு திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலரும் தளி எம்.எல்.ஏ.வுமான தளி ஒய்.பிரகாஷ் தலைமை வகிக்கிறார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.ஏ.சத்யா வரவேற்றுப் பேசுகிறார்.
திமுக தீர்மானக் குழுத் தலைவரும், உயர்நிலை திட்டக்குழு உறுப்பினருமான பொன்.முத்துராமலிங்கம் மற்றும் தமிழக உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவரும், முன்னாள் துணை வேந்தருமான அ.ராமசாமி ஆகியோர் "நீட்' தேர்வு குறித்து பேசுகின்றனர்.
வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ. பி.முருகன், திமுக மேற்கு மாவட்ட அமைப்பாளர் அ.யுவராஜ் ஆகியோர் முன்னிலையில் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.