10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மத்தூர் கலைமகள் கலாலயா மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப் பள்ளி மாணவர்கள் முறையே 495, 492, 491 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியளவில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவர்களைப் பாராட்டி பள்ளியின் தாளாளர் மு.இராசேந்திரன் தமிழ்ப் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறியது: தொடர்ந்து 14 ஆண்டுகள் 10-ஆம் வகுப்பில் மிகவும் பின்தங்கிய மாணவர்களை சேர்த்து 100 சதவீதத் தேர்ச்சியை காட்டியுள்ளோம். கலைமகள் பள்ளி என்றாலே படிப்பில் சராசரியான மாணவர்களை பயிற்றுவித்து சாதனை மாணவர்களாக உருவாக்கும் பள்ளி ஆகும் என்றார்.