பர்கூர் அருகே சாலை விபத்தில் காயமடைந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள மல்லப்பாடியைச் சேர்ந்தவர் தங்கபாலு(30). இவர், மோட்டார் சைக்கிளில் தனது மனைவி ஹேமாவதி, குழந்தை சுதிஷா (3) ஆகியோருடன் பர்கூர் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை சென்றாராம். சுண்டம்பட்டி அருகே சென்ற போது, எதிரே வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் தங்கபாலு சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதாம்.
இந்த விபத்தில் குழந்தை சுதிஷாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த குழந்தையை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்தனர். ஆனால், அந்தக் குழந்தை வியாழக்கிழமை இரவு உயிரிழந்தது. இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.