அரசம்பட்டியை அடுத்த பண்ணந்தூர் கிராமத்தில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழைக்கு புளியமரம் சாய்ந்து இரண்டு வீடுகள் சேதமடைந்தன.
போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த பத்து நாள்களாக மாலை நேரத்தில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பயங்கர சத்தத்துடன் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இம்மழைக்கு பண்ணந்தூர் நான்கு ரோட்டில் தனியார் அரிசி அரைவை ஆலை முன் இருந்த முனியம்மாள் மற்றும் மணியம்மாள் வீடுகள் மீது 60 வருடம் பழைமையான புளியமரம் விழுந்தது. இதில் வீட்டின் முன்புறம் முழுவதும் சேதமடைந்தது.