ராயக்கோட்டையில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை கீழ் தெருவைச் சேர்ந்தவர் முனிராஜ் (42). இவர் ராயக்கோட்டை தொலைபேசி அலுவலகம் பின்புறம் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தாரம். இதுகுறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீஸார் அங்கு சென்று அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்த முனிராஜை கைது
செய்தனர்.