கிருஷ்ணகிரியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி பழைய பேட்டை காந்தி சிலை முன் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக, கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே ஊர்வலமாக சென்ற காங்கிரஸார், காந்தி சிலை அருகே நிறைவு செய்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஏகாம்பவாணன், ஜேசு துரைராஜ், ஆறுமுக சுப்பிரமணி, ரகமத்துல்லா, மனோகரன், முபராக், சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com