தேன்கனிக்கோட்டையில் நிகழ்ந்த கொலையில் மேலும் ஒருவருக்கு தொடர்பு

தேன்கனிக்கோட்டை அருகே நிகழ்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கொலையில், மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை அருகே நிகழ்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கொலையில், மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கண்டகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிநாராயணன் (37), விவசாயி. கண்டகானப்பள்ளி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவரான இவர், நவ.23-ஆம் தேதி இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
விசாரணையில், பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்னையில் அவர் கொலை செய்யப்பட்டது  தெரிய வந்தது. இது தொடர்பாக மாரசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் (30), பதி (எ) வெங்கடாசலபதி (29), சுரேஷ் (26), தக்கட்டியைச் சேர்ந்த கெம்பன் (எ) சுரேஷ்(27), பென்னங்கூரைச் சேர்ந்த ஹரிஷ் (27) மற்றும் மாரசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (24) ஆகிய 6 பேர் போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் சரணடைந்து சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந் நிலையில், சரணடைந்த 6 பேரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில், இந்த கொலையில் கர்நாடக மாநிலம், ஆனேக்கல் அருகே உள்ள பெத்மானள்ளியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக உள்ள சுரேஷை தேன்கனிக்கோட்டை எஸ்.பி. சங்கர் தலைமையிலான போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com