கிருஷ்ணகிரியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி பழைய பேட்டை, குப்பை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் குமார். கட்டட மேற்பார்வையாளர். இவரது மனைவி காளியம்மாள். இந்த தம்பதியின் மகள் லட்சுமி (19), கடந்த 10 நாள்களுக்கு முன் கடும் காய்ச்சலால் அவதிக்குள்ளானார். இதையடுத்து, அவர் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந் நிலையில், காய்ச்சல் குணமடையாததால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த லட்சுமிக்கு சிகிச்சை அளித்தும் பயனில்லை என மருத்துவர்கள் கூறியதால், லட்சுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து லட்சுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் மற்றும் சுகாதாரத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.