ஒசூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடையின் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த இனிப்புகளை எலி சாப்பிடுவது தொடர்பான விடியோ கட்செவி அஞ்சலில் வெளியாகியது.
இந்த விடியோ பதிவுகளைக் கண்காணித்த நகராட்சி அலுவலர்கள், ஒசூர் பேருந்து நிலையத்தில் உள்ள அக் கடையை ஆய்வு செய்தனர். அதில் சுகாதாரமற்ற முறையில் பொருள்கள் வைத்து விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அக் கடைக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.