போச்சம்பள்ளி, மத்தூர்
போச்சம்பள்ளி மற்றும் மத்தூர் துணை மின் நிலையங்களில் மின் பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (நவ.14) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் வேல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கிருஷ்ணகிரி பகிர்மான வட்டம், போச்சம்பள்ளி கோட்டம், போச்சம்பள்ளி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, புலியூர், மல்லிகல், கரடியூர், அரசம்பட்டி, பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும்,
மத்தூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட மத்தூர், சிவம்பட்டி, கவுண்டனூர், அத்திப்பள்ளம், அந்தேரிப்பட்டி, களர்பதி, குள்ளம்பட்டி, வலசைகவுண்டனுர், புளியம்பட்டி, மாடரஹள்ளி, கன்னன்டஹள்ளி, ஆம்பள்ளி, அத்திகானுர் பெருகோபனப்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று போச்சம்பள்ளி செயற்பொறியாளர்
தெரிவித்துள்ளார்.