jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:31:32 PM
திங்கள்கிழமை
16 ஏப்ரல் 2018

16 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி

பள்ளி மாணவிகள் திருமணத்துக்கு ஒத்துழைக்கக் கூடாது: நீதிபதி அறிவுரை

By DIN  |   Published on : 15th November 2017 08:08 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

பெற்றோர்கள் திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தும்போது பள்ளி மாணவிகள் ஒத்துழைப்பு அளிக்கக் கூடாது என மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவை இணைந்து நடத்திய குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம், கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.மகேஷ்குமார், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழுத் தலைவர் கே.அறிவொளி,  செயலர் எஸ்.தஸ்னீம்,  நீதிபதிகள் ஜெயஸ்ரீ, லீலா,  சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வை தொடக்கி வைத்து மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.பூர்ணிமா பேசியது: பள்ளி குழந்தைகள் படிக்கும் காலத்தில், தங்களது இலக்கை நிர்ணயித்து கடின உழைப்போடு பயணிக்க வேண்டும். அப்போதுதான், எண்ணியதை அடைய முடியும். வாழ்க்கையில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர். நன்கு கல்விக் கற்று, தங்களது வாழ்க்கையில் உயர வேண்டும்.
பெற்றோர்கள், திருமணம் செய்யக் கட்டாயப்படுத்தும்போது, மாணவிகள் ஒத்துழைக்கக் கூடாது. இதுகுறித்து புகார் தெரிவிக்கும் பட்சத்தில் சட்டம் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். பெண் குழந்தைகளைப் பாதுகாக்கக் சட்டம் உள்ளது. இதன் மூலம் சட்டம் உங்களுக்கு உதவிகள் செய்யத் தயாராக இருக்கிறது என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம், தர்மராஜா கோயில் தெரு, பழையபேட்டை காந்தி சிலை, காந்தி சாலை, வட்டச் சாலை வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது.

 

 

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
அருளும் வரமும் தரும் அட்சய திருதியை
பரியேறும் பெருமாள்

வீடியோக்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
மேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி
போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
அரிதான மலர் அழிவை நோக்கி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்