ஒசூர் அருகே அட்டூர் கிராமத்தில் புதன்கிழமை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஒசூர் வட்டாட்சியர் பூசண்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு.
ஒசூர் வட்டம் பாகலூர் உள்வட்டம் படுதேப்பள்ளி ஊராட்சி, அட்டூர் கிராமத்தில் புதன்கிழமை மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.