தீர்த்தமலை
மாம்பட்டி, ஈச்சம்பாடி, தீர்த்தமலை மற்றும் பையர்நாய்க்கன்பட்டி ஆகியதுணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தீர்த்தமலை வட்டாரப் பகுதியில் புதன்கிழமை (நவ.15) காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் : மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ்மொரப்பூர், பறையப்பட்டி, கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, ஈச்சம்பாடி, கணபதிபட்டி, செக்காம்பட்டி, செல்லம்பட்டி, கீழானூர், வேப்பம்பட்டி, தீர்த்தமலை, மேல்செங்கப்பாடி, டி.அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களூர், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, காட்டப்பட்டி, சிட்லிங், வேலனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.
தொட்டம்பட்டி
கடத்தூர் கோட்டத்துக்குள்பட்ட, தொட்டம்பட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (நவ.15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என்று, மின் வாரிய செயற்பொறியாளர் ஆர்.ரவி தெரிவித்துள்ளார்.
மின்தடை பகுதிகள்: எம்.தொப்பம்பட்டி, எலவடை, பாளையம், மருதிப்பட்டி, மொரப்பூர், மேட்டு வலசை, அண்ணல் நகர், ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, எம்.வெள்ளாளப்பட்டி, சுண்டாக்கப்பட்டி, எம்.வெளாம்பட்டி, தொட்டம்பட்டி, கல்லடிப்பட்டி, கூத்தம்பட்டி, கூச்சனூர், வீரணகுப்பம், குட்டப்பட்டி, சிங்கிரிப்பட்டி, பச்சனம்பட்டி, கதிரம்பட்டி, சாம்ண்டஹள்ளி, ஈச்சம்பாடி, காகித ஆலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.