கிருஷ்ணகிரி நாளந்தா சர்வதேச பொதுப் பள்ளியின் 25-ஆவது ஆண்டு வெள்ளி விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் நாளந்தா கல்வி குழுமத்தைச் சேர்ந்த மேட்டூர், ஒசூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதியில் செயல்படும் மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்தப் போட்டிகளை கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, கொடியசைத்து தொடக்கி வைத்தார். பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், நிர்வாக இயக்குநர்கள் கௌதம்மன், புவியரசன், முதல்வர்கள் உமா ஜோதீஸ்வரன், ஜஸ்டின் வினோதினி, வெங்கடாசலம், விஜயலட்சுமி, காஞ்சனா, சிறப்பு விருந்தினராக ஜோ, மிர் உசைன் தோஸ், அபீபா பேகம் மற்றும் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கோ கோ, கபடி, கைப்பந்து, மட்டைப்பந்து, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. விழாவில் தேசியக் கொடி, பள்ளிச்சின்னக் கொடி, பள்ளியின் குழுக் கொடி ஆகியவற்றை சிறப்பு விருந்தினர்கள்ஏற்றிவைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுககு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றன.