மத்தூர் ஒன்றிய அதிமுக (அம்மாஅணி) செயலராக கணேசகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய ஒன்றியச் செயலர் கணேசகுமார் மத்தூரில் உள்ள பெரியார், எம்ஜிஆர், அண்ணா சிலைகளுக்கும், ஜெயலலிதா உருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கணேசகுமார், ஏற்கெனவே கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக இளைஞர் அணி செயலராகவும், தற்போது ஊத்தங்கரை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.