பேரிடர் மேலாண்மை: துணை ஆட்சியர் ஆய்வு

போச்சம்பள்ளி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரி மதகுகளை துணை ஆட்சியர் தலைமையிலான குழு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

போச்சம்பள்ளி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரி மதகுகளை துணை ஆட்சியர் தலைமையிலான குழு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
 வட கிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், துணை ஆட்சியர் கிருஷ்ணகிரி மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் ஐயப்பன் தலைமையில், போச்சம்பள்ளி பகுதியில் உள்ள ஏரிகளை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி ஜம்பு ஏரி கரையின் மீது சாய்ந்து விழும் நிலையில் இருந்த பனை மரத்தை பார்வையிட்டு, அதை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், ஏரி கால்வாய்களில் மதகுகள் மற்றும் கரைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து மத்தூர் அருகிலுள்ள பெனுகொண்டாபுரம் ஏரியையும் ஆய்வு செய்தார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com