தேன்கனிக்கோட்டை அருகே அரசு நகரப் பேருந்து கவிழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
தேன்கனிக்கோட்டையில் இருந்து அரசு நகரப் பேருந்து, பிக்கனப்பள்ளிக்கு வழக்கம்போல் புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. பிக்கனப்பள்ளி தரைமட்டப் பாலத்தில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் சென்ற பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். ஓட்டுநர் முனிராஜூக்கு லேசான காயம் ஏற்பட்டது.