டெங்கு விழிப்புணர்வுப் பேரணி

ஊத்தங்கரையில் காவல் துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரையில் காவல் துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அர்சுணன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் ஊத்தங்கரை உள்கோட்டத்துக்குள்பட்ட காவலர்கள், ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்லூரி மாணவர்கள், அதியமான் மகளிர் கல்லூரி மாணவியர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அண்ணா சிலை அருகே தொடங்கிய பேரணி ஊத்தங்கரை முக்கியச் சாலை மற்றும் வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் டெங்கு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி, பாதுகாக்கப்பட்ட குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பொது இடங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், கிருமி நாசினிகளை தெளித்தல் ,நிலவேம்பு கசாயம் குடித்தல் உள்ளிட்ட வாசகங்களை முழக்கிமிட்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com