குழந்தைகள் உரிமைக்கான விழிப்புணர்வு

கோட்டையூர் கிராமத்தில் குழந்தைகள் உரிமைக்கான விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

கோட்டையூர் கிராமத்தில் குழந்தைகள் உரிமைக்கான விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டம், கோட்டையூரில் குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்பு, உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு ஊராட்சி செயலர் மாதேஷ் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளர் செந்தில்குமார், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குழந்தைகளின் உரிமைகள், சிறார் திருமண தடைச் சட்டம், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், பாலியல் வன்கொடுமை பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை அவசர தொலைபேசி எண் 1098-க்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து, குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. சட்டங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com