போச்சம்பள்ளியில் லாரி மோதியதில் அரசு அமரர் ஊர்தி ஓட்டுநர் காயமடைந்தார்.
சேலம் அரசு மருத்துவமனையில் இறந்த போச்சம்பள்ளியை அடுத்த கீழ்குப்பத்தைச் சேர்ந்தவரின் உடலை அவரது வீட்டிற்கு கொண்டு வந்த அமரர் ஊர்தி மீது அங்கம்பட்டி அருகே லாரி மோதியதில் ஓட்டுநர் காயமடைந்தார்.
போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமரர் ஊர்தி ஓட்டுநர் ஆனந்தன் (30) அளித்த புகாரின் பேரில் போச்சம்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் வசந்தி வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரியை தேடி வருகிறார்.