காவேரிப்பட்டணத்தில் மின்சாரம் பாய்ந்ததில் பந்தல் அமைப்பாளர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சம்பத்(50). இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிப்பெட் தயாரிக்கும் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகைக்காக வண்ண அலங்கார மின் விளக்குகளை அமைத்து கொடுத்தாரம்.
இந்த நிலையில், சனிக்கிழமை மின் விளக்குகளை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பத் பலத்த காயமடைந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.