தேன்கனிக்கோட்டை அருகே தந்தையை வெட்டிய மகன் கைது

தேன்கனிக்கோட்டை அருகே தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீஸார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை அருகே தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், சாப்ராங்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மப்பா (60). இவரது மகன் வெங்கடேசன் (20), மகள் முருகம்மாள் (24). முருகம்மாளுக்கு திருமணம் முடிந்து கணவர் மஞ்சுநாத் ஆகியோருடன் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், வெங்கடேசன் வியாழக்கிழமை மது குடித்து விட்டு தகராறில் தந்தை திம்மப்பா, அக்கா மற்றும் மாமா ஆகியோரை அரிவாளால் வெட்டினாராம். அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த தேன்கனிக்கோட்டை போலீஸார் வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com