பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட கட்டுரைப் போட்டியில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரி மாணவி தீபா முதலிடம் பெற்றார்.
கிருஷ்ணகிரி மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பில் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட கட்டுரைப் போட்டி கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
போட்டியின் நடுவர்களாக அரசு மகளிர் கல்லூரியின் முதல்வர் நாகராஜன், தமிழ்த் துறை உதவி பேராசிரியர் ரேவதி, பாரதி கல்வியல் கல்லூரியின் முதல்வர் நடராஜன், பாரத் சஞ்ஜார் நிகாம் நிறுவன உள்கோட்ட பொறியாளர் ரமேஷ் ஆகியோர் செயல்பட்டனர்.
இந்தப் போட்டியில் அரசு மகளிர் கலைக் கல்லூரியின் மாணவி தீபா முதலிடம் பெற்றார். இரண்டாம் பரிசை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மாணவி நந்தினியும், மூன்றாம் பரிசை பாரதி கல்வியல் கல்லூரி மாணவர் பெருமாள் ஆகியோர் பெற்றனர். முதலிடம் பெற்ற மாணவி தீபா மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியரை நேரு இளையோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்டன் வாழ்த்தினார்.