ஒசூர் குமரன் நகரில் உள்ள ஸ்ரீ யோக கணபதி, பவானி அம்மன் கோயிலில் இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனையொட்டி கோ பூஜை, கணபதி ஹோமம், துர்கா ஹோமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு திரிபுரசுந்தரி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து 200- க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இந்த வருஷாபிஷேக விழாவில் பக்திப் பாடல்கள் பாடுதல், நாகசுவர கச்சேரி, ஆகியவை நடைபெற்றது. மேலும் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்த விழாவில் ஒசூர் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து
கொண்டனர்.