மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் அளிப்பு

ஊத்தங்கரை பகல் நேர பராமரிப்பு மையத்தில் பயிலும்  மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 

ஊத்தங்கரை பகல் நேர பராமரிப்பு மையத்தில் பயிலும்  மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு வட்டார வள மையப் பொறுப்பு மேற்பார்வையாளர் ஆர்.வசந்தி தலைமை வகித்தார். ஆண்கள் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் கு.கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு  ட்ரை சைக்கிள், வீல்சேர், ரோலோட்டர்,  காலிபர் உள்ளிட்ட உபகரணங்களை  வழங்கினார். நிகழ்ச்சியில்  ஒருங்கிணைப்பாளர் எம்.மேரி,  ஆசிரியப் பயிற்றுநர் பி.சிவபிரகாசம்,  மாற்றுத் திறனாளி மாணவர்களின் சிறப்பு ஆசிரியர்கள் சி.சுரேஷ்,  கே.கவிதா, பிசியோதெரபிஸ்ட் பூங்குழலி,  உதவியாளர் எம்.மல்லிகா மற்றும் பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com