சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிருஷ்ணகிரியில் காவல் துறை சார்பில் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தியும், மரம் வளர்க்க வேண்டியும், நிலத்தடி நீரை பாதுகாக்க வலியுறுத்தியும் முழு சுகாதாரத்தின் அவசியம் குறித்தும் சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல் துறை சார்பில் நடைபெற்ற சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கிருஷ்ணகிரி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கிய இந்த பேரணி புறநகர்ப் பேருந்து நிலையம், காந்தி சாலை, பழையப்பேட்டை, வட்டச் சாலை, லண்டன் பேட்டை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்றன.