ஒசூர் பெருமாள் மணிமேகலை கல்லூரியில் செவ்வாய்க்கிழமை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களும் பயனளிக்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாமை, ஒசூர் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியும், தென் மண்டல பயிற்சிக்கான பயிற்சிக் கழகமும் இணைந்து நடத்துகின்றன.
2015, 2016 மற்றும் 2017 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி படித்த மாணவர்களுக்காக இலவச வேலைவாய்ப்பு முகாம் ஒசூர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடபெறுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். முகாமில் கலந்து கொள்ள நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை.