தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் தேர்த் திருவிழா மார்ச் 7-ஆம் தேதி நடைபெறுகிறது.
அரூர் வட்டம், தீர்த்தமலையில் அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருக்கொடியேற்றம் மார்ச் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து, மார்ச் 5-ஆம் தேதி சுவாமி திருக்கல்யாணமும், 7-ஆம் தேதி மதியம் 2 மணியளவில் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநில பக்தர்களும் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சி.நித்யா, செயல் அலுவலர் ரா.ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.