தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் மார்ச் 7-இல் தேர்த் திருவிழா

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் தேர்த் திருவிழா மார்ச் 7-ஆம் தேதி நடைபெறுகிறது.

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் தேர்த் திருவிழா மார்ச் 7-ஆம் தேதி நடைபெறுகிறது.
அரூர் வட்டம், தீர்த்தமலையில் அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருக்கொடியேற்றம் மார்ச் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து, மார்ச் 5-ஆம் தேதி சுவாமி திருக்கல்யாணமும், 7-ஆம் தேதி மதியம் 2 மணியளவில் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநில பக்தர்களும் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சி.நித்யா,  செயல் அலுவலர் ரா.ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com