உருது பெண்கள் பள்ளியில் பாராட்டு விழா

கிருஷ்ணகிரி நகராட்சி உருது பெண்கள் நடுநிலைப் பள்ளியில் புரவலர்களுக்கு பாராட்டு, பெயர் பலகை திறப்பு அண்மையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி நகராட்சி உருது பெண்கள் நடுநிலைப் பள்ளியில் புரவலர்களுக்கு பாராட்டு, பெயர் பலகை திறப்பு அண்மையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி கோட்டை நகராட்சி உருது பெண்கள் நடுநிலைப் பள்ளியில் புரவலர்களாக சேர்ந்தவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழா, பெயர் பலகை திறப்பு விழாவுக்கு கிருஷ்ணகிரி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கிருஷ்ணதேஜஸ் தலைமை வகித்தார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நடராஜன், உருது கவிஞர் முக்தார் பத்ரி, சேலம் உருது சரக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கராமத்துல்லா, பள்ளியின் தலைமையாசிரியர் நிசார் அகமத்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
விழாவில் புரவலர்கள் பாராட்டி, கௌரவிக்கப்பட்டனர். பெயர் பலகையும் திறக்கப்பட்டது. மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவை பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் ஒருங்கிணைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com