வேப்பனஅள்ளி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை சட்டப்பேரவை உறுப்பினர் முருகன் சனிக்கிழமை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி ஊராட்சிக்குள்பட்ட அரியனப்பள்ளி கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. எம்எல்ஏ முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வேப்பனஅள்ளி, அரியனப்பள்ளி, கோட்டூர், பொம்மரசம்பட்டி, கோனேகவுண்டனூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வேப்பனஅள்ளி ஒன்றிய திமுக செயலாளர் ரகுநாத், ஒன்றிய துணைச் செயலாளர் கலீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.