ஜன.19-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் ஜன.19-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரியில் ஜன.19-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியான செய்தி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆதார் அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜன.19-ஆம் தேதியும், தேன்கனிக்கோட்டையில் 23-ஆம் தேதியும், பர்கூரில் 25-ஆம் தேதியும், ஒசூரில் 30-ஆம் தேதியும் நடைபெறுகிறது. போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதியும், சூளகிரியில் 6-ஆம் தேதியும், ஊத்தங்கரையில் 8-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com