காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தனியார் நிறுவனங்கள் சார்பில் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது.
உஜ்ஜிவன் நிதி சேவை நிறுவனம், பரிணாம் பவுண்டேஷன் ஆகிய தனியார் நிறுவனங்கள் இணைந்து, காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டன. உஜ்ஜிவன் சோட்டே கடம் என்ற திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள், மேற்கூரைகள், உள்ளறைகள், மேசை, இருக்கைகள், புத்தக அலமாரிகள் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டன.
புதுப்பிக்கப்பட்ட பள்ளியை நபார்டு வங்கியின் துணைப் பொது மேலாளர் நஸ்ரின், மேலாளர் பாஸ்கர், தலைமையாசிரியர் மலர்விழி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
மேலும், உஜ்ஜிவன் நிதி சேவை நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சுதா சுரேஷ், திட்டக் கட்டமைப்பாளர் அலோக் ஷெட்டி, பரிணாம் பவுண்டேஷன் செயல் இயக்குநர் மல்லிகா கோஷ் உள்ளிட்டோர் பாராட்டி பேசினர்.