ராயக்கோட்டை அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழந்தார்.
ராயக்கோட்டை அருகே உள்ள தொட்டதிம்மனஅள்ளி ஊராட்சி, கிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி செல்வி (32). இவர் செவ்வாய்க்கிழமை ராயக்கோட்டையில்இருந்து தனது கிராமத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கிட்டம்பட்டியில் இருந்து ராயக்கோட்டை சாலையில் வளைவில் நகரப் பேருந்தும், இருசக்கர வாகனமும் திரும்ப முயன்ற போது எதிர்பாராத விதமாக சக்திவேல் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் செல்வி பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து அவரது கணவர் நாகராஜ் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம், செல்வியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராயக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.