கூட்டுறவு வங்கி மூலம் ரூ.103 கோடிக்கு பயிர்க் கடன் வழங்க இலக்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் ரூ.103 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் ரூ.103 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மண்டல இணைப் பதிவாளர் பாண்டியன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் நடப்பு 2018-2019-ஆம் ஆண்டிற்கு பயிர்க் கடன் வழங்க ரூ.103 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உள்பட்ட செயல் எல்லையைச் சேர்ந்த விவசாய உறுப்பினர்கள், உரிய ஆவணங்கள் அளித்து, சங்கம் மூலம் பயிர்கடன் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com