புளிய மரத்தின் மீது கார் மோதி விபத்து: பத்து பேர் காயம்

மத்தூர் அருகே புளியமரத்தின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில் பத்து பேர் படுகாயமடைந்தனர்.

மத்தூர் அருகே புளியமரத்தின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில் பத்து பேர் படுகாயமடைந்தனர்.
பெங்களூரைச் சேர்ந்த இளைஞர்கள் அவருடன் வேலை செய்யும் திருக்கோவிலூரைச் சேர்ந்த மணி என்பவரின் திருமணத்துக்காக திருக்கோவிலூருக்கு காரில் சென்று விட்டு பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தனர். போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் அருகே கமலாபுரம் முருகன் கோயில் அருகில் சென்றபோது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது கார் மோதியது. 
இந்த விபத்தில் பெங்களூரு மல்லேஸ்வரத்தைச் சேர்ந்த குமார் மகன் ராமு (26),  செல்வராஜ் (28),  பிரதிப் (28),  பாண்டி (26), பாஸ்கர் (28),  சரவணன் (24), ஸ்டாலின் (25), கோவிந்தராஜ் (29) ஆகியோருக்கு பலத்த காயமடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதில் ஸ்டாலின் என்பவர் ஆபத்தான நிலையில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com