கராத்தே விளையாட்டுப் போட்டியில் ஒசூர் மாணவர் வெற்றி பெற்று வெண்கலம் பரிசு பெற்றார்.
அகில இந்திய அளவில் சென்னை உள்விளையாட்டு அரங்கில் 17 -ஆவது கராத்தே போட்டிகள் அக். 13, 14 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. இப் போட்டிகளில் தமிழ்நாடு, கேரளம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், தில்லி, ஜம்மு -காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தியாகராஜன், கனகராஜ் ஆகியோர் தலைமையில் போட்டி நடைபெற்றது. இதில் கட்டா மற்றும் சண்டைப் பிரிவு போட்டியில் ஒசூர் அசோக் லேலண்ட் பள்ளி மாணவர் ஜெயசுகின் சண்டைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றார். அவருக்கு பயிற்சியாளர் மோகன்குமார் வாழ்த்துத் தெரிவித்தார் .