பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வ.நாராயணன் தலைமை வகித்தார். அமைப்புச் செயலர் கருணாநிதி, ஓய்வுபெற்ற முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நீட் தேர்வு பயிற்சியிலிருந்து முதுநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். முதுநிலையாசிரியர் காலிப் பணியிடங்களுக்கு இரண்டாம்கட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.