டீசல் விலையை இரு மாதங்களுக்கு  ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும்: ரிக் உரிமையாளர்கள் கோரிக்கை

டீசல் விலையை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ரிக் உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

டீசல் விலையை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ரிக் உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரியில் மாவட்ட ரிக் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில்,  கிருஷ்ணகிரியில் மாவட்ட ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர்,  முகவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ரிக்  உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஹைதர் அலி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தாஸ், பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
ஆழ்துளைக் கிணறு அமைக்க ஒரு மணி நேரத்துக்கு 100 லிட்டர் டீசல் செலவாகிறது. டீசல் விலை ஏற்றத்தால் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான செலவு அதிகரித்துள்ளதால், கட்டணமும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, டீசல் விலையை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com