கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால், காவிரி ஆற்றில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 7ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நொடிக்கு 8,500 கன அடியாக அதிகரித்து, தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க 65-ஆவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.