ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால்,  ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால்,  ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால்,  காவிரி ஆற்றில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 7ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து,  வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நொடிக்கு 8,500 கன அடியாக அதிகரித்து, தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க 65-ஆவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.  கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com