பென்னாகரம் அருகே போடூர் பகுதியில் மாற்றுக்கட்சியில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்தனர்.
பென்னாகரம் அருகே போடூர் பகுதியில் மாற்றுக் கட்சியினர் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்ததையடுத்து, இணைப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலர் வினு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சண்முகம், மாநில இளைஞர் சங்க அமைப்பு துணைத் தலைவர் சத்தியமூர்த்தி, வன்னியர் சங்க துணைத் தலைவர் பாடிசெல்வம் மற்றும் இளைஞர் சங்க மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலர் வெங்கடேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.