தொடர் மழை: கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் உயர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
கிருஷ்ணகிரி அணைக்கு செப்.11-ஆம் தேதியன்று நீர்வரத்து விநாடிக்கு 28 கன அடியாக இருந்தது. செப்.12-ஆம் தேதி விநாடிக்கு 148 கன அடியும், 13-ஆம் தேதி விநாடிக்கு 212 கன அடியும், 14-ஆம் தேதி விநாடிக்கு 394 கன அடியாக உயர்ந்தது. செப்.15-ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்வரத்து விநாடிக்கு 459 கன அடியாக உயர்ந்தது. நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருவதால் கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டமானது செப்.15-ஆம் தேதி 33.65 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 148 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com