நாமக்கல் பேருந்து நிலையத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியில் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட புகைப்படங்கள், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் வி.சரோஜா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்ட புகைப்படங்கள், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் குறித்த புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.அண்ணாதுரை, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் கி.மோகன்ராஜ், அ.க.ரமேஷ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.