அர்த்தநாரீஸ்வரர் கோயில் உண்டியலில் பணம் திருட்டு வழக்கு: சிபிசிஐடி விசாரணை தேவை

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உண்டியல் திருட்டு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உண்டியல் திருட்டு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இந்து முன்னணி நகரத் தலைவர் சின்னுசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
 இதுதொடர்பாக தமிழக முதல்வர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு விவரம்:
 திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் மலைக் கோயில் உண்டியலில் அர்ச்சகர்கள் லட்சக்கணக்கில் பணம் திருடியிருப்பது அண்மையில் போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
 இதுபோல பல திருட்டு சம்பவங்கள் பல ஆண்டுகளாக நடந்திருக்கலாம். பொதுமக்களின் சந்தேகத்தை போக்கும் வகையில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com