மாநில சிலம்பாட்ட போட்டிக்கு வீரர்கள் தேர்வு

தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் நடத்தும் மாநில அளவிலான சப் ஜீனியர், சீனியர் சிலம்பாட்டப் போட்டிக்கு நாமக்கல் மாவட்ட அணி வீரர்கள், விராங்கனைகள் தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் நடத்தும் மாநில அளவிலான சப் ஜீனியர், சீனியர் சிலம்பாட்டப் போட்டிக்கு நாமக்கல் மாவட்ட அணி வீரர்கள், விராங்கனைகள் தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது.
 திருச்செங்கோடு ராமசாமி அம்மனியம்மாள் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை முகாம் நடைபெற்றது. மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் தலைவர் பாபு, செயலாளர் சக்திவேல், இயக்குநர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 தகுதித் தேர்வில் பங்கேற்று விளையாடியவர்களில் பாலபிரதீப், அரவிந்த், சரண்யாஸ்ரீ, அனிதா, தனபால், தமிழழகன், ஜோதி, லதா ஆகியோர் மாநில சிலம்பாட்டப் போட்டிக்கு தேர்வுபெற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com